Thursday, October 14, 2010

வாய் இறுகல் நோய்

நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள் அதன் இலகு தன்மையை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது கடினமாகும், இந்நிலையே வாய் இறுகு நோய்.



அறிகுறிகள்:
வாயின் சதைகளில் ரத்தஓட்டம் குறைந்து சதை வெளிறி காணப்படுதல், எரிச்சல், வாய் உலர்ந்து போதல், சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள். சில நேரங்களில் குரல் மாற்றம், கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம். பொதுவாக நான்கு விரல்கட்டை அளவு திறக்கும் வாய், இரண்டு விரல்கட்டை அளவுக்கும் குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்.

காரணிகள் :
பொதுவாக பான்பராக், பாக்கு, புகையிலை, அதிகமான காரம் பயன்படுத்துவோர், வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.



பாக்கு, தம்பாக்கு, புகையிலை, அதிக காரம் போன்றவற்றை தவிர்த்தல், இரும்பு சத்து, வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல், அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும்.

துவக்க நிலையில் பான்பராக், பாக்கு போடுவதை நிறுத்துதல், காபி, டீ, ஆல்கஹோல் தவிர்த்தல், மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும். முற்றிய நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும், அறுவை சிகிச்சையும் தற்சமயம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ஸ்டெம் செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.

நன்றி பல் மருத்துவர் ரோகிணிசிவா.


.

7 Comentários:

வால்பையன் said...

நிக்கோடின் கறையை நீக்கலாம்னு நினைச்சேன், ஒரு நண்பர், அதனால் பல்லில் இருக்கும் எனாமல் போகும்னு சொல்றார், உண்மையா, நான் பல்லை கிளீன் பண்ணலாமா இல்லை இனிமே ஒழுங்கா!? பல்லு விளக்கினா மட்டும் போதுமா!?

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ரோகிணிசிவா said...

@வால்பையன்,
இது பலருக்கும் வரும் ஐயம்,இதை கேட்டதிற்கு நன்றி நண்பரே .,

பல் மருத்துவரின் துணை கொண்டு வருடம் ஒரு முறை பல் சுத்தம் செய்வதால் எந்த ஒரு கெடுதலும் வருவது இல்லை .
பல் சுத்தம் செய்யப்படும் போது எனாமல் நீக்க படுவது இல்லை , பல் மேல் படிந்துள்ள வெளிப்புற கறை,மற்றும் காறை மட்டுமே நீக்கப்படுகிறது.
ஒரு நாள் இல்ல இரு நாட்கள் பல் கூச்சம் இருகலாம்,அது மிக இயல்பான விடயம்.
பல் மேல் பதிந்துள்ள காறை நீங்கும் போது பற்களின் இடைவெளி அதிகரித்துள்ளது போல் தோன்றும் அதும் இயல்பே,முறையாய் பல் சுத்தம் பேணப்படும்,போது பின்னர் அவ்விடைவெளி,ஈறு பகுதி வளர்ந்து அடைக்கப்படும்.

வால்பையன் said...

ரொம்ப நன்றி டாக்டர்!

அப்போ அடுத்த நேயரின் கேள்வியை பார்க்கலாம்!

*****

டாக்டர் எனக்கு 33 வயசு ஆகுது, பல்லுக்கு இடையில் ஒரு சின்ன கேப்பு இருக்குது, இப்போ பல்லு கட்டுனா அதை சரி செய்ய முடியுமா? இல்லை சிமெண்ட் வச்சு ஓடையை அடைச்சிரலாமா?

இந்த கேள்வியை கேட்டிருப்பது, மதுரையிலிருந்து மங்கூஸ் பாண்டி, உங்க பதில் என்ன டாக்டர்!

ரோகிணிசிவா said...

@ மங்கூஸ்பாண்டி .,
நீங்க விருப்ப பட்ட ஷங்கர்,இல்ல அரசு,டால்மியா போன்ற சிமெண்ட்களை பயன்படுத்தலாம்,

ஆனால் பல் மருத்தவரின் துணை கொண்டு செய்யப்படும் போது,பற்களின் இடைவெளியை கணக்கிட்டு,பல் நிறம் கொண்ட ரெசின் மூலம் அந்த சந்து அடைக்கப்படும் , இல்லை கம்பி போட்டு சரி செய்யலாம்,ஆனால் அதற்கு முன் தங்களின் பல்லின் ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும்.
சில நேரத்தில் பல் எடுத்து விட்டு வேறு பல் வைப்பதும் பரிந்துரை செய்யப்படும்

Unknown said...

சிறு வயது முதலே வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வழிதல், ஈறு வீக்கம்,
போன்ற பாதிப்புகளில் அவதிப் பட்டு வந்தேன். நல்லெண்ணெய் கொப்பளித்ததின்
மூலம் மேற்ச்சொன்ன அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கியது இன்றும் வியப்பில்
வைத்துக் கொண்டே இருக்கிறது என்னை.. கண்டிப்பாக முதல் நாளே மற்றம் உணர முடியும்.

Unknown said...

போன தீபாவளி தனியே தன்னந்தனியே. இந்த தீபாவளி வலை உலகத்துடன்,


இந்த தீபாவளிக்கு நாங்களும் ஒரு வலைப்பூவை உருவாக்கி, பதிவராக "தலை"யெடுத்து இருக்கிறோம். அந்தவகையில் எங்கள் வலைப்பூவிற்கு இது 'தல" தீபாவளி. இந்த இனிய வேளையில் ஈரோடு வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO