Thursday, January 28, 2010

மதுரையில் குழந்தைகள் நல கருத்தரங்கு - நினைவூட்டல்

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே மதுரைப் வலைப்பதிவர்களின் ஏற்பாட்டில், மதுரையில் குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் மன நல மருத்துவர் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நாள் : 31.01.2010 ஞாயிறு நேரம் : மாலை 3 மணி - 6 மணி
இடம் : செமினார் ஹால், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் கீழ்கண்ட அலைபேசி எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும்.

தருமி - 9952116112
சீனா - 9840624293
பாலகுமார் - 9486102490
ஜெரி ஈஷானந்தா - 9791390002
ஸ்ரீதர் - 9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு.....
dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com
______________________________________________________________

சமூக நோக்கோடு இந்த கருத்தரங்கை நடத்தும் மதுரை வலைப்பதிவர்களுக்கு ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக....மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.





4 Comentários:

ஆரூரன் விசுவநாதன் said...

மதுரை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

Jerry Eshananda said...

அன்புக்கு நன்றிகள்,

கார்த்திகைப் பாண்டியன் said...

thanks a lot for the support friends..:-))))

மணிஜி said...

மதுரையம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO