Wednesday, December 23, 2009

நண்பர்களுக்கு சமர்பிக்கிறோம்.

அன்புசால் நண்பர்களே...

எங்கள் ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமத்தால் நடத்தப்பட்ட சங்கமம் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்ததாக சுமார் முப்பது பதிவர்கள் தானாக முன்வந்து பல இடுகைகள் இட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

இந்த நிகழ்வின் வெற்றிக்குப் பின்னால் பல பதிவர்களின் உழைப்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை. ஆரம்பம் முதல் நடத்தலாம் என்ற நம்பிக்கை கொடுத்தோடு, எந்த ஒரு கணத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் சிறிதும் நம்பிக்கையை சிதைக்காமலும், ஊக்கத்தைக் கைவிடாமலும் தொடர்ந்து பல வகைகளில் ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்து பதிவர்களுமே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள்...

தானாக முன்வந்து நிதியளித்த சண்முகராஜன், பீம்பாய், தாமோதர் சந்துரு, அப்பன், பட்டிக்காட்டான், லவ்டேல் மேடி, முருக.கவி, நிதியளித்ததோடு சிறிதும் முகம் சுளிக்காமல் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட பாலாசி, கார்த்திக், நந்து, வால்பையன், அகல்விளக்கு, கோடீஸ்வரன், வசந்த்குமார், வாசகர்கள் ஜாபர், பைஜு, பரணி இவர்கள்தான் இந்த நிகழ்வின் வெற்றிக்கு மிக மிக முக்கியக் காரணம். அதே சமயம் ஒருவர் தலைமையேற்று நடத்த வேண்டும், மற்றொருவர் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால் மட்டுமே நாங்கள் இருவரும் முன்னால் நிற்கவேண்டியதாக இருந்தது.

பதிவுல நண்பர்கள் நிகழ்வு பற்றி எழுதும் பொழுது அளித்த பாராட்டை எங்களோடு பாடுபட்டு, உதவிய அனைத்து ஈரோடு நண்பர்களுக்கும் சமர்பிக்கிறோம்.

இப்படிக்கு
ஈரோடு கதிர், ஆரூரன்

(பதிவர்கள் ஈரோடு கதிர், ஆரூரன் சார்பாக இடப்பட்ட இடுகை)

5 Comentários:

vasu balaji said...

ஏனுங்க. இதுக்கே உங்க ரெண்டு பேத்தையும் பாராட்டணுமா இல்லையா? இந்த டீம் ஸ்பிரிட்தான் மிக அவசியம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குழுமத்துக்கு வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

அடுத்த மீட்டிங்குக்கு டேட் குறிங்க தல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

Unknown said...

மிகச் சிறப்பாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தீர்கள். அடுத்த மீட்டிங்குக்கு என் நண்பன் அமரபாரதி ஒரு ஆலோசனை சொன்னான். அதை நேரில் சந்தித்து சொல்கிறேன்.
அன்புடன்
சந்துரு

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO