Thursday, December 24, 2009

பதிவர் லதானந்த் கவனத்திற்கு

சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலான பதிவர்களிடமிருந்து சில பல இடுகைகளும், பற்பல பின்னூட்டங்களும் பார்க்க நேர்ந்த போதும் திரு. லதானந்த் அவர்களிடமிருந்து எதுவும் வரவில்லையென்பது ஆச்சரியமாக இருந்தது, அதேசமயம் அவரின் பின்னூட்டத்தை ஒரேயொரு பதிவரின் இடுகையில் மட்டுமே பார்க்க முடிந்தது வியப்பும் மகிழ்ச்சியும் கொடுத்தது. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் பட்டியலிட்டிருக்கும் குறைகளை குறைந்த பட்சம் எங்களிடம் நேரிடையாகவோ, அலைபேசி மூலமோ எந்தவொரு விளக்கமும் கேட்காமல் எழுதியது இன்னும் பெரிய ஆச்சரியத்தையும், கொஞ்சம் அதிர்ச்சியையும் கொடுத்தது.

அவரின் விமர்சனம் குறித்த இடுகை
ஈரோடு பதிவர் சங்கமம் சில விமர்சனங்கள்

//விருந்தினர்களை அழைத்துப் பேசவும் சொல்லிவிட்டு, அவர்கள் பேசும்போது வம்படியாகக் குறுக்கே குதர்க்கமாக விதண்டாவாதம் host ஒருவரே செய்வதை அனுமதித்தது சரியா? //

அழகாகப் போய்க்கொண்டிருந்த நிகழ்வில் அசாதாரணமான சூழல் உருவாகாமல் இருக்கும் பொருட்டே... அந்த இடத்தில் நாங்கள் அனுமதித்தது நிச்சயம் தவறுதான்.... அதற்காக பங்கேற்பாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்... ஆனால் கசப்பான உண்மை அந்தச் சூழல் நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று....


மற்றபடி நீங்கள் விமர்சித்த மற்ற விசயங்கள் முன்பே எங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் படி நடந்தேறியது... எங்களுக்கு இதுபோல் பல அமைப்புகளின் கூட்டங்களை, பல பயிற்சி வகுப்புகளை நடத்திய அனுபவம் உண்டு, அதன் அடிப்படையிலேயே, நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.

Ice breaking என்பது இந்த நிகழ்வுக்கு முற்றிலும் அவசியமற்றது, பொருந்துவது சிரமமானது என்பதாலேயே தவிர்க்கப்பட்டது. அடுத்து Ice breaking பயிற்சி வகுப்புகளுக்கு மட்டுமே மிக அவசியமான ஒன்று. பதிவர்களின் பெயர், அடையாளம் தெரிந்தவுடன் கரம் பற்றி, முகம் நோக்கி மிக சுவாரசியமாக அரவணைத்துப் பேசி மகிழ்ந்ததை கண்கூடாகப் பார்த்தேன்.

// பிற துறைகளில் எவ்வளவுதான் சிறப்புப் பெற்றவர்களாக இருந்தாலும் பதிவுலகுக்குத் தொடர்பற்றவர்களை அழைத்துப் பேச வைப்பது எதற்காக?//

இது நடத்துனர் குழுவும், தமிழ்மணம் திரட்டியும் இணைந்து முடிவுசெய்தது. அதுவும் அவர்களை வாழ்த்துரை மட்டுமே வழங்க அழைத்திருந்தோம்.

// ஒரு சிலரை மட்டும் (என்னை உள்பட) மேடையில் அமர வைப்பது ஒருவித பார்ஷியாலிடி போலத் தெரிந்தது//

ஒரு பார்ஷியாலிடியும் இல்லை.... எங்களுக்கு அடையாளம் தெரிந்த பதிவர்கள், கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என நடத்துனர் குழு பரிந்துரை செய்தவர்களை பேச வைக்க முடிவு செய்தோம்.

//புரவலர்களுக்கான priority ஆக இருக்குமோவென்றால் சீனா, நான், காசி போன்றோர் மேடையேறியதால் அந்த லாஜிக்கும் இடிக்கிறது//

நீங்கள், சீனா பதிவர்கள், காசி சிறப்பு அழைப்பாளர்...

//முதலிலேயே யாருக்காவது ஏதாவது தலைப்பில் பேச ஆர்வமா எனக் கேட்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமேயல்லாது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எந்த அளவுகோல் கொண்டு சிலரை மட்டும் மேடையேற்றுகிறார்கள் என (வெளியில் சொல்லாமல்) சிலர் நினைக்கலாம். (நான்தான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளுவதில்லையே!)//

பதிவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டுத்தான், அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறை சார்ந்து பேச அழைக்கப்பட்டனர். ஓரே ஒரு பதிவருக்கு மட்டும்தான் அரங்கிற்கு வந்தபோது அவர் ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆனால் மேடையில் பேசிய் மற்றொரு பதிவர் ”என்ன தலைப்பில் பேசட்டும்” என்று கேட்டது முற்றிலும் நகைச்சுவைக்காகவே, ஏனெனில் அவரிடம் அன்று காலையே பேச வேண்டும் என்ற செய்தியையும், தலைப்பையும் நான் கூறிவிட்டேன்.... நாங்கள் சங்கடம் ஏற்படுத்தியதாக எழுதும் முன் குறைந்த பட்சம் அவர்களிடம் நீங்கள் கலந்து பேசியிருக்கலாம்


//(ஒன்றைக் கவனியுங்கள் நண்பர்களே! மிகச் சிறப்பாக எழுதுபவர்கள் சிறந்த பேச்சாளர்கள் அல்லர் என்பது பொது விதி)//


சரிதான்... இங்கு பேச்சாளராக மிளிரச் செய்ய அவர்களை மேடையேற்ற வில்லை. மனதில் இருக்கும் விசயத்தை பகிர்ந்து கொள்ள வைத்தோம்..


// ஒரு கட்டத்தில் மேடையில் முன்று சிறப்பு விருந்தினர்களை வைத்துக்கொண்டு நினைவுப் பரிசினை இரண்டு பேருக்கு மட்டும் தந்தது சரியா?//

முற்றிலும் தவறான திசைக்கு மாற்றும் தவறான கேள்வி. மேடையில் அமர்ந்ததில் பதிவர்கள் யார், சிறப்பு அழைப்பாளர்கள் யார் என்பதில் கூட உங்களுக்கு குழப்பம் இருப்பது தெரிகிறது... சங்கமம் தொடர்பான பழைய இடுகைகளை தயவுசெய்து வாசியுங்கள்.. எல்லா விபரமும் தெளிவாக உள்ளது... யார் யாருக்கு மேடையில் நினைவுப்பரிசு என்பதெல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று... இது குறித்து பங்கேற்பாளர்கள் மத்தியில் எதுவும் திரிக்கப்பட்டு வருவது ஆரோக்கியமானதல்லவே.

//சங்கமத்தின் வருங்காலச் செயல் திட்டம் என்ன என்பதைப்பற்றி ஒரு தெளிவின்மை நிலவியதே?//


நிகழ்காலத்திட்டம் மட்டும் தான் அன்றைய இலக்கு... சங்கம் நடத்துவதுதான் அன்றைய செயல்திட்டம். வருங்காலத் திட்டமோ, செயல்பாடோ குறித்து குழுமம்தான் முடிவுசெய்ய வேண்டும்...


//நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த கலந்துரையாடலில் அதனை ஒருங்கிணைக்க ஐந்தாறு பேரை நியமித்தது சரியா?//

அதில் ஒன்றும் தவறில்லை... மேடையேற்றப்பட்டவர்கள் அனுபவம் மிக்க பதிவர்கள், வேறுபட்ட நகரங்களைச் சார்ந்தவர்கள்... ஆகவே பதிவர்கள் அவர்கள் மூலம் கலந்துரையாட வாய்ப்புகிடைத்தது... அனானி குறித்து நிறைய நேரம் பேசிய பின்பும், ஒரு கட்டத்தில் நான் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் நீங்களே பரிசல், சுமஜ்லா ஆகியோரிடம் கேள்வி கேட்டது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

//மேற்கண்டவை அனைத்தும் பலத்த சிந்தனைக்குப் பிறகே எழுதுகிறேன்//

பலத்த சிந்தனைக்கு முன், இந்த விமர்சனங்களை வைக்கும் முன்.... அன்று நிகழ்ச்சியை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நடத்திய எங்கள் பதிவர்களில் யாரேனும் ஒருவரையாவது அலைபேசியில் அழைத்து குறைந்த பட்சம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்திருக்கலாம்... அதன்பின்னும் உங்களுக்கு குறைகள் பட்டிருந்தால் தங்கள் வலைப்பூவில் வெளியிட்டிருக்கலாம்.

அப்படி ஏதும் செய்யாமல்.... அதை விடுத்து... உங்கள் மனதில் பட்டதை நிரந்தரமாக பதிவு செய்து கலந்து கொள்ளாத பதிவர்கள், வாசகர்களுக்கு எடுத்துச் சென்றது வருத்தம் அளிக்கிறது... கலந்து கொண்ட பதிவர்களுக்கு தெரியும் இதில் இருக்கும் மாயை, ஆனால் கலந்து கொள்ளாதவர்கள் வாசிக்கும் போது.... எங்கள் உழைப்பு, திட்டமிடல் கறைபடிந்ததாகவே பதிந்து போகும் என்பதை நீங்கள் அறியாமல் போனதுதான் மிக மோசமான ஆச்சர்யம்... ஒரு விரல் சுட்டும் போது மீதி விரல்கள் நம்மைத்தான் சுட்டுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிந்தவர்கள்தானே...

இப்படிப்பட்ட விமர்சனங்களில் குத்தும் கேள்விகள், ஒரு பொது நிகழ்வை நடத்துபவர்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கலாம் அல்லது அடுத்து எங்காவது நடத்தலாம் என நினைப்பவர்களுக்கு வேண்டாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கலாம் என்பது என் பணிவான கருத்து...

.................. சங்கமம் நடத்துனர் குழு சார்பாக ஈரோடு கதிர்

23 Comentários:

யுவகிருஷ்ணா said...

பதிவர் சந்திப்பு கூட்டங்கள் பொதுவாக இன்ஃபார்மலாக நடக்கின்றன. மேடை என்ற ஒன்று இருப்பதில்லை. லதானந்தின் ‘மேடை' குறித்த விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். மேடை என்று வந்துவிட்டாலே அங்கு அமர்பவர்கள், பங்கேற்பாளர்களைவிட ஒரு படி மேலே என்ற இயல்பான எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடுகிறது :-(

மிகச்சிறப்பாகவே இந்நிகழ்வை நடத்தி முடித்த ஈரோட்டுப் பதிவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.

அதில் நமக்கு சில படிப்பினைகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். பதில்களையும் அளிக்க வேண்டும்.

நீங்கள் இங்கே தெளிவான, முழுவதும் ஏற்றுக் கொள்ளும்படியான பதில்களை அளித்திருக்கிறீர்கள்.

Anonymous said...

//யுவகிருஷ்ணா //

என்னாச்சு , கருப்பு முடிஞ்சு பதிவுலகம் வந்தாச்சு போல ...

Kodees said...

யாரும் / எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல!

அன்புடன்

உண்மைத்தமிழன் said...

கதிர்..

அங்கிள் அக்கறையாத்தான் சொல்லியிருக்கிறார்.. நீங்களும் அன்போடுதான் பதில்களை விளக்கியிருக்கிறீர்கள்..!

எல்லாம் நன்மைக்கே..!

நிகழ்காலத்தில்... said...

எனக்கு அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் பதிவராக தோன்றவில்லை,

எல்லாரும் என் சகோதரிகள், சகோதரர்கள், பங்காளிகள், மாப்புகள், வாலுவைக் கூட என் தம்பியாகத்தான் பார்த்தேன்.

குடும்ப நிகழ்வாகவே பார்க்கிறேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் குடும்பத்துக்குள் என்ன இல்லாமல் இருக்கிறது.?

ரோட்டோர டீக்கடையில்கூட ”நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள், குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்” என எழுதி வைத்திருக்கிறார்கள்.

மூத்த பதிவரான லதானந்த் விழாவில் மிகவும் மதிக்கப்பட்டவர் தன் கருத்துகளை விழாக்குழுவினரிடம் தனியே சொல்லி இருக்கலாம், அல்லது முன்னரே இது குறித்து விவாதித்து இருக்கலாம்.

மறப்போம், ஒன்றிணைவோம்

வாழ்த்துகள் ஈரோடு நண்பர்களே உற்சாகத்தோடு இருங்கள்

Cable சங்கர் said...

கதிர்.. மற்ற கந்தாயமெல்லாமிருக்கட்டும்.. நிகழ்ச்சியில் லதானந்த் அங்கிள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தமாதிரி அவரின் படங்களை மட்டுமே போட்டு தன்னையே சிறப்பித்து கொண்டதை பற்றி அவரின் கருத்தென்ன.? போட்டோ கிடைக்கவில்லை என்ற நொல்லை சாக்கு வேண்டாம். ஏனென்றால் அடுத்த நாளே பழமைபேசி எல்லாருடய போட்டோக்களை போட்டுவிட்டார். நிச்சயமாய் எனக்கேதும் காழ்ப்புணர்சியோ..அல்ல. எனக்குள் எழுந்த கேள்வி. நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திய ஈரோட்டு குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

மணிஜி said...

கேபிள் சங்கர்.. உங்க போட்டோவை போடலைன்னு காண்டா?

பிரபாகர் said...

கேபிள் அண்ணா சொன்னதுதான் நானும்....

இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கனுமோ?

பிரபாகர்.

Cable சங்கர் said...

/கேபிள் சங்கர்.. உங்க போட்டோவை போடலைன்னு காண்டா?
/

ஏய்ய்ய்ய்ய்... தண்டோரா.... நாளைக்கு உங்க போட்டோ என் பதிவிலேர்ந்து நான் தூக்கல.. வேட்ட..வேட்ட வேட்டைகாரன்.. இல்ல நானு..:)))

சும்மா சொல்லிபாத்தேன்

உண்மைத்தமிழன் said...

யோவ் கேபிளு..!

உன் போட்டோவை போட்டு பதிவாளர்களை பயமுறுத்த அங்கிளுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..? அதுதான் போடலை..! நல்ல விஷயந்தான.. இதுக்கெதுக்கு மேலேயும், கீழேயும் குதிக்குற..?

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

என்ன மறுமொழி இடுவதெனத் தெரியவில்லை - அழகான ஒரு சங்கமத்தை அருமையாக நடத்திச் சென்று வெற்றிகரமாக நிறைவு செய்தமை நன்று நன்று - நல்வாழ்த்துகள்

நண்பர் லதானந்த் எழுப்பியுள்ள பிரச்னைகள் பற்றி விளக்கமாக பதில் எழுதியதும் நன்று

மறப்போம் - அனைத்து மன வருத்தங்களயும் மறப்போம் - இணைவோம் - இணைய நண்பர்களாக இணைவோம்

ஈரோடு பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

Unknown said...

அன்புள்ள கதிர் நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது.
நண்பர் லதானந் சொல்லியுள்ள நிறைகளை முதலில் கவனத்தில் கொள்வோம். அவர் சொல்லியுள்ள குறைகளை அடுத்த அமர்வில் சரி செய்வோம்.
அன்புடன்
சந்துரு

Sanjai Gandhi said...

ஓ.. இதுக்குப் பேர்தான் அடுத்த கட்டடத்துக்கு.. சாரி..சாரி.. அடுத்த கட்டத்துக்கு நகர்வதா?

Anonymous said...

////நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த கலந்துரையாடலில் அதனை ஒருங்கிணைக்க ஐந்தாறு பேரை நியமித்தது சரியா?//

why did you go to the stage if you were not interested or if you think that it was wrong.

கிரி said...

//இப்படிப்பட்ட விமர்சனங்களில் குத்தும் கேள்விகள், ஒரு பொது நிகழ்வை நடத்துபவர்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கலாம் அல்லது அடுத்து எங்காவது நடத்தலாம் என நினைப்பவர்களுக்கு வேண்டாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கலாம் என்பது என் பணிவான கருத்து//

இது ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது.

லதானந்த் அவர்கள் குழுவினரிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டுவிட்டு பிறகு தன் கருத்தை தெரிவித்து இருக்கலாம். மனதில் வைத்துக்கொள்ளாமல் கேட்பது நல்லது தான் இது பலர் சம்பந்தப்பட்டு இருப்பதால் சில நேரங்களில் இவை தர்ம சங்கடத்தையே அளிக்கிறது.

பேசினாலே பல பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். ஏற்றுக்கொள்ளமுடியாதற்க்கு தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது. இதை போல நடத்துபவர்கள் இதையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்பின் கதிர்

என்ன மறுமொழி இடுவதெனத் தெரியவில்லை - அழகான ஒரு சங்கமத்தை அருமையாக நடத்திச் சென்று வெற்றிகரமாக நிறைவு செய்தமை நன்று நன்று - நல்வாழ்த்துகள்//

repeateyy

லதானந்த் said...

நீன்களே உங்கள் விளக்கத்தில் திரு.சீனா அவர்கள் சிறப்பு விருந்தினர் என்கிறீர்கள். உடனேயே எனக்கு யார் சிறப்பு விருந்தினர் எனக் குழப்பம் என்கிறீர்கள். சிறப்பு விருந்தினரான சீனாவுக்கு நினைவுப் பரிசளிக்காமைதான் என் வருத்தம். எனக்கு விவாதங்களில் என்ருமே நாட்டமில்லாத்தால் விடைபெறுகிறேன்.

ஈரோடு கதிர் said...

//நீன்களே உங்கள் விளக்கத்தில் திரு.சீனா அவர்கள் சிறப்பு விருந்தினர் என்கிறீர்கள்.//

மீண்டும் தவறாக எழுதுகிறீர்கள்...
நான் எங்கேயும் அப்படி விளக்கம் கொடுக்கவில்லை

//சீனாவுக்கு நினைவுப் பரிசளிக்காமைதான் என் வருத்தம்.//

மேடையில் மொத்தம் 13 பதிவர்கள் அமர்ந்தார்கள்... அவர்களெல்லாம் உங்க கண்ணுக்கு தெரொயலையா..... நீங்களாக நினைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதுவது எந்த வகையில் நியாயம்


//எனக்கு விவாதங்களில் என்ருமே நாட்டமில்லாத்தால் விடைபெறுகிறேன்.//

தவறான விமர்சனத்திலும் நாட்டாம் இல்லாமல் இருந்திருந்தால் நான் விவாதிக்கவே வந்திருக்க மாட்டேனுங்க

Anonymous said...

திரு லதானந்த் அவர்களின் விமர்சனத்திளிருந்த கண்ணியம் உங்கள் பதில்களில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
பொதுவில் நடந்த ஒரு விழா குறித்து தனது கருத்துகளை எந்த தாக்குதல் நோக்கமும் இன்றி அவர் பதிவு செயய்திருப்பதாகவே எனக்கு தோன்றியது.
உங்களிடம் தனிப்பட்ட முறையில் விளக்கம் பெற்றிருக்கலாம் என்பது சரிதான். ஆனால் அது மட்டுமே சரி என வாதிடுவது முறையாகாது. இனிமேல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஆலோசனைகளாகவே அவர் கருத்துகள் இருந்தனவேயன்றி உங்கள் முயற்சிகளையும் உழைப்பையும் தாழ்மைப் படுத்துவது போன்றோ, சேறு வாரி இறைப்பது போன்றோ நிச்சயமாக இல்லை. உங்கள் பதில்கள் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் எழுதப் பட்டதாகத் தோன்றுகிறது.
// நிகழ்ச்சியில் லதானந்த் அங்கிள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தமாதிரி அவரின் படங்களை மட்டுமே போட்டு தன்னையே சிறப்பித்து கொண்டதை பற்றி அவரின் கருத்தென்ன.? போட்டோ கிடைக்கவில்லை என்ற நொல்லை சாக்கு வேண்டாம். ஏனென்றால் அடுத்த நாளே பழமைபேசி எல்லாருடய போட்டோக்களை போட்டுவிட்டார்.//
லதானந்த் அபிரிமிதமான விளம்பரப் பிரியர் என்பது அவரது சில பதிவுகளை வாசித்தவர்களுக்கே புரியும். அவரது போட்டோக்கள் எல்லா பதிவுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன. சுய புராணங்கள் பலப் பல. ஆனால் இவை எல்லாம் அவரது தனிப்பட்ட விருப்பமல்லவா ஷங்கர் ? ஒவ்வொருவரும் தன இருப்பை, இருப்பின் சிறப்பை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். அவர் இந்த விஷயத்தில் மிக வெளிப்படையாக செயல்படுகிறார். நொள்ளை சாக்கு எல்லாம் அவர் சொன்ன மாதிரி தெரிய வில்லையே.

அவரது விமரிசனத்திற்கான விளக்கங்கள் நன்று. ஆனால் அது ஒரு தாக்குதலுக்கான எதிர் தாக்குதல் போன்ற தோரணையில் அமைந்திருப்பதுதான் கொஞ்சம்உறுத்துகின்றது.

Raman Kutty said...

//தவறான விமர்சனத்திலும் நாட்டாம் இல்லாமல் இருந்திருந்தால் நான் விவாதிக்கவே வந்திருக்க மாட்டேனுங்க//

good stand..

Anonymous said...

குற்றம் சொல்லியே பெயர் வாங்கலாம் என நினைப்பவர்களை தூர விலக்கி முன்னேறுங்கள்

வால்பையன் said...

இது தொடர்பாக நான் ஒரு பதிவெழுதி கொண்டிருக்கிறேன்!

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO