Saturday, December 26, 2009

சண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...

அன்பின் நண்பர்களுக்கு,

பதிவர் சந்திப்பை கலக்கி விட்டீர்கள்......கடந்த ஒருவாரமாக அனைவரும் இதை பற்றிதான் பேச்சாக இருக்கிறது...இதுவரை நடந்த சந்திப்புகளிலேயே ஈரோடு சந்திப்பு தான், வந்தவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவும், வராதவர்களுக்கு பெரும் ஏக்கத்தையும் கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

உங்களின் ஏற்பாடுகள் அனைத்தும், அனைவருக்கும் ஒரு முன்னுதாரமாக அமைந்திருக்கிறது....

உண்மையில் நமது ஈரோடு பதிவர் சந்திப்பு ஒரு குடும்ப விழாபோல, நண்பர்கள் விழா போல சிறப்பாக நடந்தமையையும், கலந்து கொண்டவர்களின் பதிவில் இதை குறிப்பிட்டுள்ளமையும் கண்டு நானும் ஈரோட்டுகாரன், எங்க ஊரில் நடந்த சந்திப்பு என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைய வைத்துவிட்டீர்கள்.

கடந்த சில நாட்களாகவே இதைப்பற்றி கடிதம் எழுத வேண்டும் முயற்சி செய்தேன், ஆனால் கடும் வேலை பளுவின் காரணமாக முடியவில்லை. (Here, the main Market season is Christmas and New Year only)

இந்த இயந்திர உலகத்தில், மனிதனை மனிதன் மதிக்காத உலகத்தில், சொந்த வேலைகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு....பொதுநலன் பற்றியும் கொஞ்சம் சிந்தித்து, அதற்காக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், உடல் உழைப்பையும், நேரத்தையும், பொருளையும் செலவு செய்த உங்களுக்கும் உங்களுக்கு உதவியாக இருந்த நமது ஈரோடு வாழ் நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன், ,

என்னையும் இதில் சிறு பங்களிப்பு செய்ய அனுமதி அளித்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்

உங்கள் சமூக பணி தொடர என்றும் துணைவர தயாராக இருக்கிறேன்,

மீண்டும் நன்றிகள் பல

அன்புடன்,
ந. சண்முகராஜ்
( Togo- West Africa - 00228- 9363900 and 00228 - 9909333)

குறிப்பு: 20.12.2009 ஞாயிறு அன்று நடந்த ‘ஈரோடு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்தின்’ பங்களிப்பாளராகவும், அந்நிகழ்ச்சியினை முழுவதும் வீடியோ கவரேஜ் செய்ய செலவுகளை ஏற்றவருமான அன்பர் ந.சண்முகராஜ் அனுப்பிய மின் மடல் இது. அந்த காணொளித்தொகுப்பும் வந்துவிட்டது, விரைவில் வலையேற்றம் செய்யப்படும்.

................ ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக க. பாலாசி.


6 Comentários:

மணிஜி said...

நன்றி சண்முகராஜ்....

பழமைபேசி said...

அவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்; காணொளிகள் காண மிகவும் ஆவலுடன்!

--பழமைபேசி.

ஈரோடு கதிர் said...

மிக்க நன்றி சண்முகராஜ்

ஆரூரன் விசுவநாதன் said...

thank u shanmugaraj

butterfly Surya said...

நன்றி சண்முகராஜ். இந்த பதிவையும் தொகுப்பில் இனைத்து விட்டேன்.

http://mynandavanam.blogspot.com/2009/12/blog-post_21.html

வால்பையன் said...

Thanks a lot

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO